இந்தக் கவிதைக்களப் பக்கத்தில் உங்களால் எமக்கு அனுப்பி
வைக்கப்படும் கவிதைகளும் பிரசுரிக்கப்படும்.
வைக்கப்படும் கவிதைகளும் பிரசுரிக்கப்படும்.
பயணம்
புதை குழியை நோககிப் பயணிக்கும் மனிதன்தன்
இதையத்துள் தேக்கி வைத்த எண்ணங்களோ கோடி
விதைத்து விட்ட வினைகளெல்லாம் விருட்சமாகி நிற்க
நினைத்ததெல்லாம் சிதைந்து போகச் சிதையை நோக்கிப் பயணம்
கதையளந்து செயலிழந்து மதி மயங்கி மனிதன்
சதை வளர்த்து இயல்பில் மிருக இச்சை கொண்ட சனியன்
எதையும் கூறி மமதை கொண்டு இறுமாந்து திரிந்து
கதை முடிந்து கடசியாகக் காடு நோக்கிப் பயணம்
உலகதனில் தானொருத்தன் தவிர மற்றோரெவரும்
உயர்வு இல்லை என இயம்பிப் பழிப்புரைத்த மனிதன்
அயர்வில்லாமல் அயலவனை அவமதித்துத் திரிந்து
துயரதனிலே துவண்டு சுடலை நோக்கிப் பயணம்
அடுத்திருந்து கெடுப்பதுவும் கெடுத்து விட்டுக் கேலி
எடுத்தெடுத்து இயம்புவதும் இலாபமது நாடி
வடுத் தொழிலே புரிவதுவும் வருத்தத்தையே தேடி
படுத்ததோடு முடிந்த அவன் பாடையிலே பயணம்
வேர்த்த வேர்வை துடைப்பதற்கும் விட்டிடாமல் வேலை
கார்த்திருந்து வாங்கித் தொழிலாழிகளை மாய்த்து
சேர்த்து வைத்த பணப்பங்குக்காய் சிறார் பகைக்க வைத்து
பார்த்த எதிர் பார்ப்பு எல்லாம் பறந்திடவே பயணம்
பிறந்தவுடன் தொடங்குகின்றான் பயணமதை மனிதன்
கறந்து இட்ட தாயையும்தான் அனுப்புகின்றான் பயணம்
இறந்திறந்து இடு காடு ஏகக் கண்டும் நயனம்
மறந்ததேனோ உண்மைதனை வளம் படைத்த இதயம்
தர்மா
புதை குழியை நோககிப் பயணிக்கும் மனிதன்தன்
இதையத்துள் தேக்கி வைத்த எண்ணங்களோ கோடி
விதைத்து விட்ட வினைகளெல்லாம் விருட்சமாகி நிற்க
நினைத்ததெல்லாம் சிதைந்து போகச் சிதையை நோக்கிப் பயணம்
கதையளந்து செயலிழந்து மதி மயங்கி மனிதன்
சதை வளர்த்து இயல்பில் மிருக இச்சை கொண்ட சனியன்
எதையும் கூறி மமதை கொண்டு இறுமாந்து திரிந்து
கதை முடிந்து கடசியாகக் காடு நோக்கிப் பயணம்
உலகதனில் தானொருத்தன் தவிர மற்றோரெவரும்
உயர்வு இல்லை என இயம்பிப் பழிப்புரைத்த மனிதன்
அயர்வில்லாமல் அயலவனை அவமதித்துத் திரிந்து
துயரதனிலே துவண்டு சுடலை நோக்கிப் பயணம்
அடுத்திருந்து கெடுப்பதுவும் கெடுத்து விட்டுக் கேலி
எடுத்தெடுத்து இயம்புவதும் இலாபமது நாடி
வடுத் தொழிலே புரிவதுவும் வருத்தத்தையே தேடி
படுத்ததோடு முடிந்த அவன் பாடையிலே பயணம்
வேர்த்த வேர்வை துடைப்பதற்கும் விட்டிடாமல் வேலை
கார்த்திருந்து வாங்கித் தொழிலாழிகளை மாய்த்து
சேர்த்து வைத்த பணப்பங்குக்காய் சிறார் பகைக்க வைத்து
பார்த்த எதிர் பார்ப்பு எல்லாம் பறந்திடவே பயணம்
பிறந்தவுடன் தொடங்குகின்றான் பயணமதை மனிதன்
கறந்து இட்ட தாயையும்தான் அனுப்புகின்றான் பயணம்
இறந்திறந்து இடு காடு ஏகக் கண்டும் நயனம்
மறந்ததேனோ உண்மைதனை வளம் படைத்த இதயம்
தர்மா
மும்மொழியும் நால் மதமும் முகம்காட்டும் தேசம்தான்
மூத்தகுடி வேடுவரும் இன்றுவாழும் தேசம்தான்
வெள்ளையர்கள் ஆண்டு மீண்ட வையகத்துச் சொர்க்கம் தான்
வெண்புறாவும் வெண்கொடியும் வேண்டி ஏங்கும் தேசம்தான்
மூத்தகுடி வேடுவரும் இன்றுவாழும் தேசம்தான்
வெள்ளையர்கள் ஆண்டு மீண்ட வையகத்துச் சொர்க்கம் தான்
வெண்புறாவும் வெண்கொடியும் வேண்டி ஏங்கும் தேசம்தான்
சேமமடுவில் நான் வாழந்தபோது நிகழ்ந்த
சம்பவங்களை எண்ணிப்பார்க்கின்றேன்.
மரத்தடியில் மதவுகளில்
மணிக்கணக்காய் வம்பளந்து
வீண்டித்த பொழுதுகளை
வியப்புடனே மீண்டும்
ஒருதடவை மீட்டுப்பார்க்கிறேன் யான்
வன்னியில் வேட்டை
மழைக்கால வேளையிலே மான் வேட்டையாட என
கட்டுத் துவக்குடனே கால்கடுக்க நடந்ததுவும்
சருகுச் சத்தம் கேட்காமல் சத்தமின்றி நடந்த வேளை
மந்தி தாவிப் பாய்ந்ததனால் மான் ஓடிச்சென்றதுவே
சோர்வுடனே வீடுவந்த சோகத்தை எண்ணுகிறேன்.
குளத்தலைகரையில் கும்மென்ற மழையிருட்டல்
பன்றிதனைக் குறிவைத்துப் பக்குவமாய்ச் சென்றவேளை
சோழகக் காற்றின் சுழல் வீச்சுக் காரணமாய்
பாய்ந்து சென்ற பன்றியினை பார்த்து நானும்
பரிதாபமாகியதை எண்ணுகின்றேன்.
மழைக்கால வேளையிலே மான் வேட்டையாட என
கட்டுத் துவக்குடனே கால்கடுக்க நடந்ததுவும்
சருகுச் சத்தம் கேட்காமல் சத்தமின்றி நடந்த வேளை
மந்தி தாவிப் பாய்ந்ததனால் மான் ஓடிச்சென்றதுவே
சோர்வுடனே வீடுவந்த சோகத்தை எண்ணுகிறேன்.
குளத்தலைகரையில் கும்மென்ற மழையிருட்டல்
பன்றிதனைக் குறிவைத்துப் பக்குவமாய்ச் சென்றவேளை
சோழகக் காற்றின் சுழல் வீச்சுக் காரணமாய்
பாய்ந்து சென்ற பன்றியினை பார்த்து நானும்
பரிதாபமாகியதை எண்ணுகின்றேன்.
வாழ்த்து
பொதுசேவை செய்யவென்று புறப்பட்டார் நண்பர் பலர்
சவுத்தோலில் கூடினார்கள் சங்கம் ஒன்று அமைத்தார்கள்
பள்ளிக்கூடச் சீருடைகள் பயன்பெறும் புத்தகங்கள்
முனைப்புடன் செய்தாரே முறையாக ஊரில்
வாழவேண்டும் அவர் சேவை வாழ்த்துகிறேன் இங்கிருந்து
பொதுசேவை செய்யவென்று புறப்பட்டார் நண்பர் பலர்
சவுத்தோலில் கூடினார்கள் சங்கம் ஒன்று அமைத்தார்கள்
பள்ளிக்கூடச் சீருடைகள் பயன்பெறும் புத்தகங்கள்
முனைப்புடன் செய்தாரே முறையாக ஊரில்
வாழவேண்டும் அவர் சேவை வாழ்த்துகிறேன் இங்கிருந்து