இப்பக்கத்தின் கீழ் வன்னி மக்களின் வாழ்வியல் முறைகள்,
கலை, கலாச்சாரம்,தொழில், ஆகியவை இடம் பெறும்.
நாட்டார் பாடல்களுள் வன்னியின் அருவி வெட்டுப் பாடல்கள்
இடைப்பட்ட காலத்திலே வாய்மொழி மரபிலே வழங்கப்பட்டு வந்த நாட்டார் இலக்கியங்கள் ஆய்வுக்குள்ளாகி எழுத்துருவாக்கம் பெற்று வந்த போதும், வன்னியின் அருவிவெட்டுப்பாடல்கள் பெரியஅளவில் ஆய்வுக்குள்ளாக்கப்பட்டு எளுத்துருவாக்கம் பெற்றதாக அறியமுடியவில்லை. வன்னியில் மிகப்பழமையான காலந்தொட்டு நெல்அறுவடையின்போது, அருவிவெட்டுப் பாடல்களைப்பாடி அருவி வெட்டுவார்கள். களைப்புத்தோன்றாதிருக்கவும், மிகவும் வேகமாக அருவியை வெட்டவும் இப்பாடல்களைப் பாடுவார்கள். இப்பாடல்களில் சில முற்காலச்சரித்திரங்களைக் கூறுவதாகவும், நாட்டுப் பழக்கவழக்கங்களைக் கூறுவதாகவும், மிகவும் ரசனைக்குரிய இலக்கியச் செறிவுடையதாகவும்கூட இருக்கும். சிலபாடல்கள் நகைச்சுவையுடையதாகவும், சிந்திக்க வைப்பதாகவும் இருக்கும்.
தற்காலத்தில் இம்முறை வழக்கொழிந்து, பாடல்கள் மறக்கப்பட்டு, வன்னியின் மக்களே இப்படியொரு முறையிருந்ததா என அதிசயிக்குமளவிற்கு இவை மறைந்துவிட்டன. இவ் அருவிவெட்டுப்பாடல்கள் ஏடுகளில் எழுதி வைக்கப்பட்டோ, அன்றேல் கற்பிக்கப்பட்டோ வழங்கப்பட்டு வரவில்லை. மூத்தோர்கள் தாம் அருவிவெட்டும்போது இப்பாடல்களைப்பாடி அருவி வெட்டுவார்கள். இளையோர்கள் மூத்தோர்களைப்பின்பற்றிப் பிற்பாட்டாகப்பாடி அருவிவெட்டுவார்கள். அப்போது இளையவர்களுக்கு அப்பாடல்கள் மனனமாகிவிடுகின்றது. இப்படியே வாழையடி வாழையாக இப்பாடல்களைப் பாடிவந்திருக்கின்றார்கள். இப்பாடல்களை இயற்றியவர்கள் பாடல் இறுதிவரிகளில் தமது பெயரைக்குறித்தும் பாடியிருக்கின்றார்கள்.
பரத்தை அருவிவெட்டு
உதாரணமாக வன்னியின் ஒருகிராமத்தில் செல்வாக்குமிக்க ஓர் பெரிய கமக்காரர் இருந்தால்இ அவர் தமது வயலின் அருவிவெட்டுக்கு தம் கிராமத்திலுள்ளோருக்கும்இ அயல் கிராமத்தவர்களுக்கும்இ இன்னும் தூரத்துக் கிராமத்திலுள்ள தமது நண்பர்களுக்கும் ஓர் நாளைக்குறிப்பிட்டு அழைப்பார். அவரின் அழைப்புக்கு எல்லோரும் மகிழ்ச்சியோடு வருவார்கள்.
அன்று அவர்வீட்டில் பெரிய விருந்தே நடக்கும். இந்த அருவிவெட்டு நிகழ்விலேதான் கிராமத்தவர்கள் தத்தம் அருவிவெட்டும் வேகத்தையும்இ அருவிவெட்டுப்பாட்டுப் பாடும்போது
தமது கவித்திறனையும்இ குரல்வளத்தையும் போட்டாபோட்டி போட்டுக் காட்டும் களமாகப் பயன்படுத்துவார்கள். இதற்கும் முற்பட்ட காலத்தில் அவர்களின் பாட்டுக்கு மிருதங்கம்இ உடுக்கைஇ சல்லரி போன்ற வாத்தியங்களைக்கூடப் பயன்படுத்தி வந்திருக்கின்றார்கள். இப்படியாகச் சம்பளம் வழங்கப்படாத அருவிவெட்டினைப் பரத்தை அருவிவெட்டு என அழைப்பார்கள்.
இவ்அருவிவெட்டுப் பாடல்கள் பண்டிச்சிந்துஇ குருவிச்சிந்துஇ அருவிச்சிந்துஇ பள்ளு என இன்னும் பல வகையான பாடல் வகைகளைக்கொண்டிருக்கும்.
எமக்குத்தெரிந்த சில பாடல்வரிகளை இங்கே தருகின்றேன்.
“பரிதிகுல மன்னன் குளக்கோட்டுராமன்
பண்டு பூதப்படைகள் கொண்டு சென்றனரே
கருதியே கல்லும் மண்ணும் சுமப்பித்துக்
கல்லுமலை போலவே கற்குளமும் கட்டி
வருஷமிரு செந்நெல் விளையப் பன்னிரண்டு
மாதமும் புனல்பாய மதகு செய்தனரே
ஐங்கோணநாதருக்காமென்று சொல்லிக்
கல்லினிலெழுதியக் கட்டினில் நிறுத்தி
காடுவெட்டிக் கட்டையானது பிடுங்கிக்
கவைமரம் கொண்டங்கு கஞ்சலுமொதுக்கி
மேடுதட்டிப் பள்ளமானது நிரப்பி
வெள்ளமதில் உள்ளபடி நிற்குமென்றெண்ணி
ஆடடைத்துப் பூடு கொத்தி எறிவாரும்
அரிய வயலைப் புளுதி ஆக்கிட நினைந்து
மாடு கட்டிடுவர் சிலர் வயல் பயளையாக
வறியர் பலர் குப்பை சருகிட்டு வருவாரும்
கொத்தியொரு மண்வெட்டியாலே விதைத்து
குடில்களும் வைத்தங்கு காவலும் காத்து
புதிதிலே கிளையானை வந்ததும் போனதும்
புதுக்குளம் வாழுகின்ற உலகமாதாவும்
நித்திரையடாவென்று தட்டியெழுப்பி
நீ பிழைத்தோடென்று கரைசேரவிட்டு
மட்டுருக்காலே அரிவாளடித்து
மாவிலங்கம் பிடிதன்னிலிறுக்கி
வெட்டும் பிடியைச் சிறக்கவே வெட்டி
வெள்ளித் தகட்டால் விரற்கூட்டமிட்டு
நல்லைநகர் வாழுகின்ற கந்தசுவாமியை
நன்றாகவே நினைந்து கையிலருவாளெடுத்து
தொல்லுலகு கைலையூர் வால்விளந்தாரிமார்
தோராமல் நிலையருவி விளையாடினாரே
ஆற்றிலே தண்ணீர் அலசி வருமாப்போல்
அதன்பிறகே புள்ளினம் தொடர்ந்து வருமாப்போல்
சேற்றிலே தண்ணீர் தெளிந்து வருமாப்போல்
செம்பவள நாரையினம் நீந்தி வருமாப்போல்
தொல்லுலகு கைலையூர் வால்விளந்தாரிமார்
தோராமல் நிலையருவி விளையாடினாரே”
தொடரும்
பொ.தர்மகுலசிங்கம்
கலை, கலாச்சாரம்,தொழில், ஆகியவை இடம் பெறும்.
நாட்டார் பாடல்களுள் வன்னியின் அருவி வெட்டுப் பாடல்கள்
இடைப்பட்ட காலத்திலே வாய்மொழி மரபிலே வழங்கப்பட்டு வந்த நாட்டார் இலக்கியங்கள் ஆய்வுக்குள்ளாகி எழுத்துருவாக்கம் பெற்று வந்த போதும், வன்னியின் அருவிவெட்டுப்பாடல்கள் பெரியஅளவில் ஆய்வுக்குள்ளாக்கப்பட்டு எளுத்துருவாக்கம் பெற்றதாக அறியமுடியவில்லை. வன்னியில் மிகப்பழமையான காலந்தொட்டு நெல்அறுவடையின்போது, அருவிவெட்டுப் பாடல்களைப்பாடி அருவி வெட்டுவார்கள். களைப்புத்தோன்றாதிருக்கவும், மிகவும் வேகமாக அருவியை வெட்டவும் இப்பாடல்களைப் பாடுவார்கள். இப்பாடல்களில் சில முற்காலச்சரித்திரங்களைக் கூறுவதாகவும், நாட்டுப் பழக்கவழக்கங்களைக் கூறுவதாகவும், மிகவும் ரசனைக்குரிய இலக்கியச் செறிவுடையதாகவும்கூட இருக்கும். சிலபாடல்கள் நகைச்சுவையுடையதாகவும், சிந்திக்க வைப்பதாகவும் இருக்கும்.
தற்காலத்தில் இம்முறை வழக்கொழிந்து, பாடல்கள் மறக்கப்பட்டு, வன்னியின் மக்களே இப்படியொரு முறையிருந்ததா என அதிசயிக்குமளவிற்கு இவை மறைந்துவிட்டன. இவ் அருவிவெட்டுப்பாடல்கள் ஏடுகளில் எழுதி வைக்கப்பட்டோ, அன்றேல் கற்பிக்கப்பட்டோ வழங்கப்பட்டு வரவில்லை. மூத்தோர்கள் தாம் அருவிவெட்டும்போது இப்பாடல்களைப்பாடி அருவி வெட்டுவார்கள். இளையோர்கள் மூத்தோர்களைப்பின்பற்றிப் பிற்பாட்டாகப்பாடி அருவிவெட்டுவார்கள். அப்போது இளையவர்களுக்கு அப்பாடல்கள் மனனமாகிவிடுகின்றது. இப்படியே வாழையடி வாழையாக இப்பாடல்களைப் பாடிவந்திருக்கின்றார்கள். இப்பாடல்களை இயற்றியவர்கள் பாடல் இறுதிவரிகளில் தமது பெயரைக்குறித்தும் பாடியிருக்கின்றார்கள்.
பரத்தை அருவிவெட்டு
உதாரணமாக வன்னியின் ஒருகிராமத்தில் செல்வாக்குமிக்க ஓர் பெரிய கமக்காரர் இருந்தால்இ அவர் தமது வயலின் அருவிவெட்டுக்கு தம் கிராமத்திலுள்ளோருக்கும்இ அயல் கிராமத்தவர்களுக்கும்இ இன்னும் தூரத்துக் கிராமத்திலுள்ள தமது நண்பர்களுக்கும் ஓர் நாளைக்குறிப்பிட்டு அழைப்பார். அவரின் அழைப்புக்கு எல்லோரும் மகிழ்ச்சியோடு வருவார்கள்.
அன்று அவர்வீட்டில் பெரிய விருந்தே நடக்கும். இந்த அருவிவெட்டு நிகழ்விலேதான் கிராமத்தவர்கள் தத்தம் அருவிவெட்டும் வேகத்தையும்இ அருவிவெட்டுப்பாட்டுப் பாடும்போது
தமது கவித்திறனையும்இ குரல்வளத்தையும் போட்டாபோட்டி போட்டுக் காட்டும் களமாகப் பயன்படுத்துவார்கள். இதற்கும் முற்பட்ட காலத்தில் அவர்களின் பாட்டுக்கு மிருதங்கம்இ உடுக்கைஇ சல்லரி போன்ற வாத்தியங்களைக்கூடப் பயன்படுத்தி வந்திருக்கின்றார்கள். இப்படியாகச் சம்பளம் வழங்கப்படாத அருவிவெட்டினைப் பரத்தை அருவிவெட்டு என அழைப்பார்கள்.
இவ்அருவிவெட்டுப் பாடல்கள் பண்டிச்சிந்துஇ குருவிச்சிந்துஇ அருவிச்சிந்துஇ பள்ளு என இன்னும் பல வகையான பாடல் வகைகளைக்கொண்டிருக்கும்.
எமக்குத்தெரிந்த சில பாடல்வரிகளை இங்கே தருகின்றேன்.
“பரிதிகுல மன்னன் குளக்கோட்டுராமன்
பண்டு பூதப்படைகள் கொண்டு சென்றனரே
கருதியே கல்லும் மண்ணும் சுமப்பித்துக்
கல்லுமலை போலவே கற்குளமும் கட்டி
வருஷமிரு செந்நெல் விளையப் பன்னிரண்டு
மாதமும் புனல்பாய மதகு செய்தனரே
ஐங்கோணநாதருக்காமென்று சொல்லிக்
கல்லினிலெழுதியக் கட்டினில் நிறுத்தி
காடுவெட்டிக் கட்டையானது பிடுங்கிக்
கவைமரம் கொண்டங்கு கஞ்சலுமொதுக்கி
மேடுதட்டிப் பள்ளமானது நிரப்பி
வெள்ளமதில் உள்ளபடி நிற்குமென்றெண்ணி
ஆடடைத்துப் பூடு கொத்தி எறிவாரும்
அரிய வயலைப் புளுதி ஆக்கிட நினைந்து
மாடு கட்டிடுவர் சிலர் வயல் பயளையாக
வறியர் பலர் குப்பை சருகிட்டு வருவாரும்
கொத்தியொரு மண்வெட்டியாலே விதைத்து
குடில்களும் வைத்தங்கு காவலும் காத்து
புதிதிலே கிளையானை வந்ததும் போனதும்
புதுக்குளம் வாழுகின்ற உலகமாதாவும்
நித்திரையடாவென்று தட்டியெழுப்பி
நீ பிழைத்தோடென்று கரைசேரவிட்டு
மட்டுருக்காலே அரிவாளடித்து
மாவிலங்கம் பிடிதன்னிலிறுக்கி
வெட்டும் பிடியைச் சிறக்கவே வெட்டி
வெள்ளித் தகட்டால் விரற்கூட்டமிட்டு
நல்லைநகர் வாழுகின்ற கந்தசுவாமியை
நன்றாகவே நினைந்து கையிலருவாளெடுத்து
தொல்லுலகு கைலையூர் வால்விளந்தாரிமார்
தோராமல் நிலையருவி விளையாடினாரே
ஆற்றிலே தண்ணீர் அலசி வருமாப்போல்
அதன்பிறகே புள்ளினம் தொடர்ந்து வருமாப்போல்
சேற்றிலே தண்ணீர் தெளிந்து வருமாப்போல்
செம்பவள நாரையினம் நீந்தி வருமாப்போல்
தொல்லுலகு கைலையூர் வால்விளந்தாரிமார்
தோராமல் நிலையருவி விளையாடினாரே”
தொடரும்
பொ.தர்மகுலசிங்கம்
Tamilnadu Slideshow: KOVIL’s trip to Veppūr (near Chidambaram), Tamil Nadu, India was created by TripAdvisor. See another Chidambaram slideshow. Take your travel photos and make a slideshow for free.